ஜப்பான் பிரதமரின் விருந்தோம்பலை விவரிக்க வார்த்தைகளே இல்லை: நெகிழும் நரேந்திர மோடி
டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விருந்தோம்பலை பார்த்து தான் அசந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
5 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார். முதல் இரண்டு நாட்கள் ஜப்பானின் பழமையான நகரான கியோட்டோவில் தங்கி அங்குள்ள கோவில்களுக்கு சென்றார் மோடி. அதன் பிறகு அவர் டோக்கியோ சென்றார்.
இந்நிலையில் அவர் தனது ஜப்பான் பயணம் குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
வார்த்தை இல்லை
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விருந்தோம்பலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது அவர் இந்தியா மீது கொண்டுள்ள அன்பு, இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
அரண்மனை
டோக்கியோவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையான அகாசகா பேலஸில் எனக்கு அளித்த வரவேற்பை பார்த்து அசந்துவிட்டேன்.
டீ பார்ட்டி
டோக்கியோ நகரில் எனக்கு சிறப்பு டீ விருந்து அளித்தார் பிரதமர் ஷின்சோ அபே.
பள்ளி
டோக்கியோவில் உள்ள தைமெய் துவக்கப் பள்ளிக்கு சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம்.