எங்க நாட்டுக்கு வாங்க, வகை வகையா சாப்பிடலாம்: ஜப்பான் சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு மோடி அழைப்பு
டோக்கியோ: இந்தியாவுக்கு வந்தால் தினமும் வகை, வகையாக சாப்பிடலாம் என்று ஜப்பானில் உள்ள சாப்ட்வேர் என்ஜினியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோ நகரில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜப்பான் டெக் அன்ட் கல்ச்சுரல் அகாடமிக்கு சென்றார். அங்கு அவர் சாப்ட்வேர் என்ஜினியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
சாப்பாடு
நீங்கள் இந்தியாவுக்கு வந்து 6 மாதங்கள் தங்கினால் கூட தினமும் புதுவகையான உணவுகளை சாப்பிடலாம். ஒரு முறை சாப்பிட்ட உணவை மறுமுறை சாப்பிடத் தேவையில்லை.
டிசிஎஸ்
இந்தியா வந்தால் டிசிஎஸ் அளிக்கும் அறைகளிலேயே முடங்கிவிட வேண்டாம். இந்தியாவை சுற்றிப் பாருங்கள்.
பாடம்
அறைகளுக்குள் இருந்து கற்பதை போன்று பயணம் செய்வதன் மூலமும் கற்கலாம்.
ரசிப்பு
மோடி தனது ஜப்பான் பயணத்தை மிகவும் ரசிப்பது அவரது நடவடிக்கைகள் மற்றும் ட்வீட்களில் இருந்து தெரிகிறது.