For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார்... போப்

Google Oneindia Tamil News

வாடிகன்சிட்டி: தான் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்கப் போவதாகவும், ஏனெனில் அந்தளவுக்கு மட்டுமே கடவுள் தனக்கு ஆயுள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ்.

தற்போது 77 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 5 நாள் பயண மாக தென்கொரியா சென்று இருந்தார். பின்னர் தனது பயணத்தை முடித்து கொண்டு வாடிகன் திரும்பிய போப், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :-

எனது ஆயுள்...

எனது ஆயுள்...

நான் எனது பாவங்கள், தவறு கள் குறித்து அறிய முயன் றேன். அதற்காக பெருமைப்படவில்லை. ஏனெனில் நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன். அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார். அதற்குள் ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது.

பீதியைத் தந்த பாப்புலாரிட்டி...

பீதியைத் தந்த பாப்புலாரிட்டி...

போப் ஆண்டவரான போது இயற்கையாகவே எனக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது. தொடக்கத்தில் அது எனக்கு சிறிய அளவில் ஒருவித பீதியை ஏற்படுத்தியது.

விருப்ப ஓய்வு...

விருப்ப ஓய்வு...

போப் ஆண்டவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவது சாத்தியமே. ஏனெனில் எனக்கு முன்பு கடந்த ஆண்டு பெனடிக்ட் அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் ‘ என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நரம்புக் கோளாறு...

நரம்புக் கோளாறு...

மேலும், தற்போது தான் நரம்பு கோளாறினால் மிகவும் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை தேவை எனவும் அப்பேட்டியில் போப் தெரிவித்துள்ளார்.

English summary
Pope Francis has publicly broached the prospect of his own death for the first time, light-heartedly giving himself "two or three years" but not ruling out retirement before then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X