For Quick Alerts
For Daily Alerts
Just In
துபாயில் நடந்த ரம்ஜான் ஸ்பெஷல் பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் வெற்றி
துபாய்: துபாயில் ரம்ஜான் பண்டிகையையொட்டி 29.07.2014 அன்று நடைபெற்ற பேட்மிண்டன் போட்டியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி மற்றும் நிஜார் அலி ஆகியோர் கோப்பையை வென்றனர்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நண்பர்கள் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி துபாயில் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 10 அணிகள் கலந்து கொண்டன.
இறுதியில் தமிழக இளைஞர்கள் சையத் அலி, நிஜார் அலி ஆகியோர் கொண்ட அணி வெற்றிக் கோப்பையினை வென்றது.
நஜீர் மற்றும் எரிக் ஆகியோர் கொண்ட அணி முதலாவது ரன்னர் அணிக்கான பரிசினையும், முருகன் மற்றும் தானிஷ் ஆகியோர் கொண்ட அணி இரண்டாவது ரன்னர் அணிக்கான பரிசினையும் பெற்றன.
வெற்றி பெற்றவர்களை நண்பர்கள் கோப்பைக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டினர்.
Comments
English summary
TN based youths won the badminton competition conducted ahead of Ramzan in Dubai.
Story first published: Thursday, July 31, 2014, 17:37 [IST]