For Daily Alerts
Just In
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு... 25 பேர் உயிரிழப்பு!
நியூயார்க்:அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயலுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பனிப்பொழிவினால் சுமார் 2100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப் பனிப்புயலுக்கு கிழக்கு அமெரிக்காதான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயலுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். பென்சுல்வேனியாவில் பனிபொழிவால் ஏற்பட்ட வாகன விபத்துகளில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத பனிப்பொழிவை விட மூன்று மடங்கு அதிகமான பனிப்பொழிவை சந்தித்துள்ளது. இந்த கடும் உறைபனியால் அமெரிக்கர்கள் பெருமளவில் உறைந்து போயுள்ளனர்.
Comments
English summary
A winter storm that brought snow and ice to the US East Coast moved off-shore today, leaving at least 25 people dead and hundreds of thousands without power and causing a large pileup in Pennsylvania that injured 30 people.
Story first published: Saturday, February 15, 2014, 11:49 [IST]