வெள்ளிப் பதக்கம்
இன்றைய குத்துச்சணடை போட்டிகளில் பங்குபெறும் 4 வீரர்கள் கண்டிப்பாக பதக்கத்தை வெல்வார்கள் என்று தெரிகின்றது. முன்னதாக டேபிள் டென்னிஸ் வீரர்களான அச்சந்தா சரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ் வெள்ளிப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.
இறுதியில் விஜேந்தர்சிங்
நட்சத்திர குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங், அயர்லாந்து வீரரான கோனர் கோய்லேயை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
வெண்கலம் வென்ற பிங்கி ராணி
மான்தீப் ஜங்கரா, லைசாராம் தேவேந்த்ர சிங், சரிதா தேவி ஆகியோரும் இறுதிச் சுற்றுக்கு சென்ற நிலையில், பெண்கள் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை பிங்கி ராணி வெண்கலமே பெற்றார்.
வெள்ளி வென்ற சீமா
பெண்களுக்கான வட்டு எறிதல் பிரிவில் சீமா புனியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கிருஷ்ணா போனியாவுடனான போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
51 பதக்கங்களுடன்..
இப்பதக்கங்களின் அடிப்படையில் 13 தங்கம், 23 வெள்ளி, 15 வெண்கலப்பதக்கங்கள் என்று 51 பதக்கங்களுடன் இந்தியா 5 ஆவது இடத்தில் உள்ளது. மேலும், 140 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், 124 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
இன்றும் பதக்க வேட்டை
இதனால், இன்றைய குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபெறும் மான்தீப் ஜங்கரா, லைசாராம் தேவேந்த்ர சிங், சரிதாதேவி, விஜேந்தர் சிங் ஆகியோர் பதக்கத்தை தட்டிச் செல்வார்கள் என்று தெரிகின்றது.