கொல்கத்தா-ஹோபர்ட்
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு, ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா-ஹோபர்ட் அணிகள் மோதுகின்றன.
பேட்டிங் ஸ்டிராங்
இரவு 8 மணிக்கு தொடங்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்-சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. சென்னை அணியில் கேப்டன் டோணி, ரெய்னா, பிராவோ, ஜடேஜா ஆகியோருடன் பேட்டிங் வலுவாக உள்ளது. பந்து வீச்சு மட்டும் சற்று பலவீனமாக உள்ளது.
சேவாக், மேக்ஸ்வெல்
பஞ்சாப் அணியில் சேவாக், மேக்ஸ்வெல்,மில்லர், பெரேரா ஆகியோர் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்களை கட்டுபடுத்தினால் மட்டுமே சென்னை அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும்.
பழி தீர்க்குமா சென்னை
இந்த போட்டியில் வெற்றி பெற்று, அடுத்ததாக இறுதி போட்டியிலும் வென்று, ஐபிஎல் தோல்விக்கு பழி தீர்க்கும் ஆவேசத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.