கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
துப்பாக்கிச் சுடுதலில் மகளிர் டபுள் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனை ஷிரேயாசி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிகளின் 4 வது நாளான இன்று தனது நாளை இந்தியா வெற்றிகரமாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று கிடைத்த வெள்ளியுடன் சேர்த்து தற்போது இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 18 பதக்கங்களுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.
இன்று பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் ஆகிய பிரிவுகளிலும் இந்தியா பதக்கத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.