குக் ஆட்டம் தள்ளாடுகிறது
குக், இதற்கு முன்பு நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் சோபிக்கவில்லை. பார்மில் இல்லாத குக், கேப்டன்ஷிப்பிலும் கோட்டைவிட்டு வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கே.பி.பீட்டர்சன் அந்த நாட்டு ஆங்கில பத்திரிகையொன்றில் எழுதியுள்ள கட்டுரையில் குக்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அரசியல்
குக் கேப்டனாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அரசியல்தான். ஆனால் அவர் ரன் அடித்து இங்கிலாந்து அணிக்கு உதவ வேண்டிய நிலையில் இருக்கிறார் என்பதால் முக்கியமான முடிவை எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தயங்க கூடாது.
தூங்க முடியாது
எனது எதிரிக்கும் ஏற்படக்கூடாது என்று நான் விரும்பும் அளவுக்கான, இன்னல் மிக்க காலகட்டத்தில் குக் மாட்டிக்கொண்டுள்ளார். குக்கால் இரவு நிம்மதியாக தூங்க முடியாது என்று நினைக்கிறேன், காலையில் எழுந்ததுமே, அவருக்கு தனது நிலைதான் நினைவுக்கு வரும்.
ராஜினாமா செய்யுங்களேன்..
அதே நேரம், இங்கிலாந்துக்கு எது நல்லதோ அதைச் செய்ய குக் முன்வர வேண்டும். தனது கேப்டன் பதவியை குக் ராஜினாமா செய்வதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். ஒரு அணியை வழிநடத்தும் அளவுக்கு புத்திசாலித்தனத்தை குக் காண்பிக்க வில்லை. இவ்வாறு பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அணி நிர்வாகத்துடன் எப்போதும் உரசிக்கொண்டிருந்ததால், அதிரடி பேட்ஸ்மேன் என்றும் பார்க்காமல் பீட்டர்சனை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கழற்றி விட்டது. இதன் காரணமாக இவ்வாறு வெறுப்பை உமிழ்ந்துள்ளார் என்று இங்கிலாந்து மூத்த கிரிக்கெட் வீரர்கள் கூறுகிறார்கள்.