For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் போட்டி: 5வது நாளில் நல்ல லாபம் பார்த்த இந்திய வீரர், வீராங்கனைகள்!

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளின் 5வது நாளின்போது இந்தியாவுக்கு தொடர்ந்து நல்ல நளாக அமைந்தது. 5வது நாளில் இந்தியா மொத்தம் 5 பதக்கங்களை வென்றது. 5வது இடத்திலும் தொடர்கிறது.

இந்தியா நேற்று வென்ற பதக்கங்களில் 2 துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் கிடைத்தது. 3 பதக்கங்களை பளு தூக்குவோர் பெற்றனர்.

நேற்றைய பதக்கங்களில் ஒரே ஒரு பதக்கம்தான் தங்கமாக அமைந்தது. அதை தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பளு தூக்குதலில் பெற்றுக் கொடுத்தார். இந்தியா தற்போது மொத்தம் 22 பதக்கங்களுடன் உள்ளது.

மொத்தம் 5 பதக்கங்கள்

மொத்தம் 5 பதக்கங்கள்

நேற்றைய போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றனர்.

ஒரே ஒரு தங்கம்

ஒரே ஒரு தங்கம்

இதில் ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.

தங்க மகன் சதீஷ் சிவலிங்கம்

தங்க மகன் சதீஷ் சிவலிங்கம்

தங்கப் பதக்கத்தை வென்றவர் சதீஷ் சிவலிங்கம். ஆடவர் பளு தூக்குதலில் 77 கிலோ பிரவில் தங்கம் வென்றார் சிவலிங்கம்.

2 வெள்ளி

2 வெள்ளி

மகளிர் துப்பாக்கிச் சுடுதல், டபுள் டிராப் பிரிவில் ஷிரேயாசி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல ஆடவர் பளு தூக்குதல் 77 கிலோ பிரிவில் ரவி கட்லு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2 வெண்கலம்

2 வெண்கலம்

ஆடவர் துப்பாக்கிச் சுடுதல், டபுள் டிராப் பிரிவில் முகம்மது ஆசப் வெண்கலம் வென்றார். மகளிர் பளு தூக்குதல் 63 கிலோ பிரிவில் பூனம் யாதவ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதுவரை 6 தங்கம்

இதுவரை 6 தங்கம்

இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 22 பதக்கங்களுடன் 5வது இடத்தில் தொடர்கிறது.

Story first published: Monday, July 28, 2014, 11:49 [IST]
Other articles published on Jul 28, 2014
English summary
India won five medals on Sunday (July 27) at the Commonwealth Games 2014 here. Two medals came from shooting and three in weightlifting.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X