நாட்கள் எண்ணப்படுகின்றன
இந்த நிலையில் தற்போது பயிற்சியாளர் டங்கன் பிளட்சரின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. அவர் வந்தது முதலே அணி ஆட்டம் கண்டுதான் வருகிறது. ஆனால் இத்தனை காலம் விட்டு விட்ட வாரியம் தற்போது டங்கனை நெருக்க ஆரம்பித்து விட்டது.
டங்கன் இனி டம்மி
ரவி சாஸ்திரி நியமனம் குறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், டங்கனுக்கு இனி வேலை இல்லை. எல்லா முடிவையும் ரவி சாஸ்திரிதான் எடுப்பார். டங்கனுக்கும் இது தெரியும். தெரியாவிட்டால் தெரிந்து கொள்ள வேண்டும்.
போனால் போகட்டும்
ஒரு வேளை டங்கன் பிளட்சர் விலக விரும்பினால் அதை வாரியம் தடுக்காது. முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றார் அவர்.
நீ வேணாம் போய்ரு போய்ரு...!
அவரிடம் பிளட்சரை விலகச் சொல்லி விட்டதா வாரியம் என்ற கேள்விக்கு, உங்களது சேவை தேவையில்லை என்பதை பல பீலர்கள் மூலம் ஏற்கனவே உணர்த்தி விட்டோம். போதிய அளவுக்கு உணர்த்தி விட்டோம் என்றார் அவர்.
டோணியுடன் இணைந்து திட்டமிடுவார் ரவி
மேலும் அவர் கூறுகையில் கேப்டன் டோணியுடன் இணைந்து ரவி சாஸ்திரி திட்டமிட்டு செயல்படுவார். சஞ்சய் பாங்கர் தனது திறமையை நிரூபித்துள்ளவர். இளம் வீரர்களை எப்படிக் கையாள வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் தற்போதைய வேகப் பந்து வீச்சாளர்கள் பலரும் பரத் அருணிடம் பயின்றவர்கள்தான். எனவே இருவரும் சிறப்பாக செயல்படுவார்கள். இப்படி இருக்கையில் டங்கனுக்கு அங்கு என்ன வேலை இருக்கப் போகிறது..
புரிஞ்சா சரித்தான்
டங்கன் தனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு ராஜினாமா செய்தால் நல்லது. அதை நாங்கள் ஏற்போம் என்றார்.
அக்டோபர் 8ல்
அக்டோபர் 8ம் தேதி இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான ஒரு நாள் தொடர் தொடங்கவுள்ளது. எனவே அதற்கு முன்பாகவே டங்கன் போய் விடுவார் என்று தெரிகிறது.
ஓஹோ.. அப்ப இது டங்கனுக்கு வச்ச குறியா..!