சென்னை- பஞ்சாப் மோதல்
நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது. போட்டியின் 3-வது நாளான இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாபை எதிர்கொள்கிறது.
வெயிட்டான அணி
2 முறை சாம்பியன், 3 முறை இரண்டாவது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கோலாச்சிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஆனால் அண்மையில் வெளியான பிக்ஸிங் சர்ச்சைகள் சென்னை அணி வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மைக் ஹஸ்சி, முரளி விஜய் இல்லை..
அத்துடன் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த மைக் ஹஸ்சியும், முரளிவிஜயும் வேறு அணிக்கு போய்விட்டனர். இந்த சீசனில் சென்னை அணி புதிய தொடக்க ஆட்டக்காரர்களை களம் இறக்க இருக்கிறது.
100வது போட்டி
சென்னை அணி விளையாடப்போகும் 100-வது போட்டி இதுவாகும். பங்கேற்பதில் செஞ்சுரி அடிக்கும் முதல் அணி என்ற பெருமையை சென்னை அணி பெறப்போகிறது. சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும் 100 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
செம வீரர்களுடன் பஞ்சாப்
சென்னை அணியை எதிர்த்து இறங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை மதிப்பிட முடியாது. முதலாவது ஐ.பி.எல்.-லுக்கு பிறகு அனைத்து முறையும் முதல் சுற்றோடு வெளியேறிய பஞ்சாப் அணி, சில முன்னணி வீரர்களை ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. வீரேந்திர ஷேவாக், ஆஷஸ் ஹீரோ மிட்செல் ஜான்சன் ஆகியோர் முக்கியமான வீரர்கள்.
இதுவரை...
இரண்டு அணிகளும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் சென்னையும், 3-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.