5 விக்கெட் வித்தியாசத்தில்
இப்போட்டியில் பெங்களூர் அணி சென்னையை வெறும் 138 ரன்களில் சுருட்டி பின்னர் 5 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை தொட்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கிரேட்...
இந்த வெற்றி குறித்து கோஹ்லி கூறுகையில், இது கிரேட் வெற்றி. எங்களது வீரர்கள் தங்களது திறமையைக் காட்டி விட்டனர். கெய்ல் அபாரமாக ஆடினார். ஆப் டிவில்லியர்ஸ் ஆட்டம் சிறப்பு. யுவராஜ் வழக்கம் போல அசத்தினார். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக ஆடினோம்.
நான் எதுவுமே சொல்லலை
எனது அணியினரிடம் எப்படி ஆட வேண்டும் என்று நான் எதுவுமே சொல்லவில்லை. யுவராஜ் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது என்றார்.
டோணி சொல்வது என்ன...
சென்னை கேப்டன் டோணி கூறுகையில், பத்து ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். அதுதான் பாதகமாகி விட்டது. நன்றாகத்தான் பந்து வீசினோம். குறிப்பாக கடைசி நான்கு ஓவர்களில் பந்து வீச்சு சிறப்பாகே இருந்தது. ஆனால் 10 ரன்கள் குறைத்து எடுத்ததால் சிக்கலாகி விட்டது.
ஹோமாக இருந்தால் என்ன...
உள்ளூரில் விளையாடுவதாக இருந்தாலும் கூட நன்றாக விளையாடும் அணியே வெல்லும். எனவே பெங்களூர் சிறப்பாக ஆடியதால் அது வென்றது என்றார் டோணி.
சரித்தான்...!