10 ஓவர் நன்றாக பந்து வீசினோம்
முதல் பத்து ஓவர்களில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் தலையெடுத்து விட்டனர்.
காலிஸையும், பாண்டேவையும் விட்டதுதான் தப்பு
காலிஸ் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் நிலைத்து நின்று ஆடி விட்டனர். அதைத் தடுக்கத் தவறி விட்டோம்.
அபாரமான ஆட்டம்
இருவருமே சிறப்பாக ஆடினார்கள். சில ஓவர்களில் அவர்கள் அடித்து ஆடியது மிரட்சியைக் கொடுத்தது.
காலிஸ் கேட்ச்தான் முக்கியக் காரணம்
காலிஸ் 34 ரன்களில் இருந்தபோது என்னிடம் அவர் கேட்ச் ஆகியிருக்க வேண்டும். ஆனால் நான் அதைத் தவற விட்டு விட்டேன். அதுதான் எங்களது தோல்விக்கு முக்கியக் காரணம். அதற்கு நான் முழுமையாக பொறுப்பேற்கிறேன்.
எனது பந்து வீச்சில் திருப்தியே
எனது பந்து வீச்சில் எனக்குத் திருப்தி உள்ளது. நன்றாகவே பந்து வீசினோம். ஒரு அணியாகத்தான் நாங்கள் தோற்று விட்டோம். அது ஏமாற்றம் தருகிறது.
முதல் போட்டிதானே
ஆனால் இது முதல் போட்டிதான். எனவே யாரும் சோர்வடைய வேண்டாம். இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன. இதைப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். தவறுகளைத் திருத்தி அடுத்தடுத்த போட்டிகளில் பிரமாதமாக ஆட வேண்டும் என்றார் மலிங்கா.