இனிமேல் கவாஸ்கர் ஃப்ரீ
இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்து விட்டதால் கவாஸ்கரின் பணியும் முடிவுக்கு வருகிறது என்று கூறியது.
ஜூன் 1ம் தேதி முதல்
கவாஸ்கரை ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இடைக்காலத் தலைவராக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அவர் ஐபிஎல் போட்டிகளை மட்டும் பார்த்துக் கொள்வார் என்றும் ஷிவ்லால் யாதவ், இன்னொரு இடைக்காலத் தலைவராக, பிற பணிகளைப் பார்ப்பார் என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
நான் என்ன செய்ய...
ஜூன் 1ம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தனது நிலை என்ன, தனது பணி என்ன என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு கோர்ட்டைக் கேட்டுக் கொண்டிருந்தார் கவாஸ்கர். இதைத் தொடர்ந்து கவாஸ்கரின் இடைக்காலத் தலைவர் பணி முடிந்து விட்டதாக கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. இனிமேல் உங்களது விருப்பபடியான வேலைகளைச் செய்யத் தடை இல்லை என்றும் கோர்ட் கவாஸ்கருக்குத் தெரிவித்துள்ளது.
வசூல் போச்சு
கவாஸ்கர் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்த சமயத்தில் அவர் டிவி வர்னணை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. இதில் அவருக்கு நல்லவருவாய் கிடைத்து வந்தது என்பது நினைவிருக்கலாம். அந்த வகையில் இது அவருக்கு சற்று இழப்புதான்.