நவீன சுயம்வரம்...
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனுமான விராத் கோஹ்லியை மேடைக்கு அழைத்து வித்தியாசமான சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் நடிகர் ஷாரூக்கான்.
காதல் விடு தூது...
அதில், சமுக வலைதளங்கள் மூலம் விராட் கோலிக்கு, வந்த ஏராளமான காதல் அழைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பெண்களின் புகைப்படங்களை ஷாரூக்கான் அவரிடம் காண்பித்தார்.
இவர்களில் யார் உங்கள் மனைவி...
இவற்றில், உங்களுக்கு பிடித்தமான பெண்ணை வாழ்க்கை துணைவியாக தேர்வு செய்து கொள்ளுங்கள் கோஹ்லி எனத் தெரிவித்தார் ஷாரூக்.
யார் அந்த தேவதை...
பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவோடு விளம்பரங்களில் இணைந்து தோன்றி வருகிறார் கோஹ்லி. இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் கூறி வருகின்றன. இந்நிலையில் தற்போதைய சுயம்வரத்தில் யாரை தன் காதல் தேவதையாக கோஹ்லி தேர்ந்தெடுப்பார் என அங்கிருந்த அனைவருக்கும் ஆவல்.
அனுஷ்கா தான் என் மனைவி...
ஆனால், கோஹ்லியோ சிறிதும் தயக்கமோ தடுமாற்றமோ இன்றி இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் படத்தையே தேர்வு செய்தார்.
புன்னகையே சம்மதத்திற்கு அடையாளம்...
அதனைத் தொடர்ந்து அந்த புகைப்படம் அவரது கழுத்தில் அணிவிக்கப்பட்டது. புன்னகையையே பதிலாக தந்த கோஹ்லி, கருத்து எதுவும் கூறவில்லை.
வேடிக்கையாக காதலைச் சொன்ன கோஹ்லி...
வேடிக்கையான சுயம்வர நிகழ்ச்சியில் அனுஷ்கா ஷர்மாவை தனது வருங்கால மனைவியாக கோஹ்லி பகிரங்கமாக வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.