ராத்திரியோடு ராத்திரியாக தாக்குதல்
நேற்று இரவு போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே யுவராஜ் வீடு மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விரைந்து வந்த போலீஸ்
தகவல் கிடைத்ததுமே போலீஸார் விரைந்து வந்தனர். வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களை அவர்கள் அமைதிப்படுத்தினர்.
ஏன் இப்படி யுவராஜ்.. ரசிகர்கள் ஆத்திரம்
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிக அருமையாக ஆடியிருந்தார் யுவராஜ். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார். ஆனால் சாதாரண இலங்கையிடம் அவர் பணிந்து போனார் என்பதுதான் ரசிகர்களின் ஆத்திரம் கலந்த கேள்வி.
டிவிட்டரில் காரித் துப்புகிறார்கள்
டிவிட்டர், பேஸ்புக்கிலும் யுவராஜை கடுமையாக விமர்சிதது வருகிறார்கள் ரசிகர்கள்.
ஹர்பஜன் சிங் அதிர்ச்சி
ஆனால் யுவராஜ் சிங்கை ரசிகர்கள் விமர்சிப்பதற்கு ஹர்பஜன் சிங் வருத்தமும், அதிர்ச்சியும் தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
இவர்தானே 2 உலகக் கோப்பைகள் கிடைக்கக் காரணம்
இதுகுறித்து ஹர்பஜன் வெளியிட்டுள்ள ஒரு டிவிட் செய்தியில், அனைவரும் யுவராஜை விமர்சிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்தான் நமக்கு 2 உலகக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. இந்தியாவுக்காக உறுதியுடன் ஆடக் கூடிய அரிய வீரர்களில் யுவியும் ஒருவர்.
2007 முதல் 2011 வரை
2007ல் நடந்த முதலாவது டுவென்டி 20 உலகக் கோப்பையை வென்றது, 2011ல் நடந்த உலகக் கோப்பையை வென்று கொடுத்தது என்று யுவராஜின் சாதனையைப் பாருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எந்த ஒரு வீரராவது யுவியைப் போல விடா முயற்சியுடன் செயல்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கூறுங்கள். இது ஒரு மோசமான தினம்.
யுவராஜ் மட்டும்தானா
மேலும் போட்டியில் யுவராஜ் சிங் மட்டும்தானா ஆடினார். மேலும் 10 பேர் இருக்கிறார்கள். அதையும் மறந்து விடக் கூடாது. நாம் சிறந்த அணியடம்தான் தோற்றுள்ளோம். தோல்விக்கு ஒருவரை மட்டும் பலிகடாவாக்குவது ஏன். இது அணி விளையாட்டு என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.