ஒரு மணி நேரம்
வங்கதேச கிரிக்கெட் வாரிய அகாடமி மைதானத்தில் ஒரு மணி நேரம் இந்த நூதன கால்பந்தாட்டத்தில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டு ஆடினர்.
கிரிக்கெட்டை மறந்துடுங்க
இந்த ஒரு பயிற்சியை மட்டுமே நேற்று இந்திய வீரர்கள எடுத்தனர். கிரிக்கெட் பயிற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை.
ஷூவோடு உள்ள போன கோஹ்லி
முதலில் ஷூ போடக் கூடாது என்று தெரியாமல் ஷூவோடு உள்ளே போய் விட்டார் கோஹ்லி. பின்னர் தவன் வநது அவரிடம் ஷூவைக் கழட்டுப்பா முதல்ல என்று கூறி கழற்ற வைத்தார்.
முதல்ல கோகோதான்
வழக்கமாக பிராக்டிஸின்போது கோகோ ஆடுவது வழக்கம். ஆனால் கடந்த 2006, 2010ல் இந்த விளையாட்டு விளையாடப் போய் யுவராஜ், ரோஹித் சர்மா ஆகியோர் காயம் அடைந்ததால் இந்த முறை கோகோவை எடுத்து விட்டு கால்பந்துக்கு மாறினர். அப்படியும் யுவராஜ் நேற்று காயமடைந்து விட்டார்.
சுதர்சன் வி.பிதான் காரணம்
இந்திய வீரர்கள் வெறும் காலுடன் கால்பந்து விளையாடும் ஐடியாவைக் கொடுத்தவர் பயிற்சியாளர் வி.பி.சுதர்சன்தானாம். இப்படி வெறும் காலுடன் ஆடினால் கால் பலமடையுமாம்.
எங்களுக்கு இதெல்லாம் சகஜமப்பா.. அக்தர்
இந்திய வீரர்கள் வெறும் காலுடன் கால்பந்து விளையாடியது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொயப் அக்தர் கூறுகையில், இது எங்களுக்கு சகஜமானது. நாங்கள் அடிக்கடி இப்படி விளையாடுவோம் என்றார் அவர்.