அடாப்ட் ஆகனும் முதல்ல.. அப்புறம்தான் ஆட்டம்
ஆசியக் கோப்பைப் போட்டியில் விளையாடிய வீரர்கள் பலர் நேரடியாக இங்கு வந்துள்ளனர். சிலர் நியூசிலாந்திலிருந்தும் அணிக்கு வந்துள்ளனர். முதலில் அடாப்ட் ஆகி விரைவாக ஆட முயற்சிக்க வேண்டும்.
சூடு சாஸ்திதான்
இங்கு வெப்பநிலை கூடுதலாகவே உள்ளது. மும்பை, சென்னை, கொல்கத்தா போல இங்கு இல்லை. சூடு ஜாஸ்திதான்.
ரொம்பத்தான் சுடுது....
ரொம்பவே சூடு உள்ளது. அதேசமயம் ஈரப்பதமும் ஜாஸ்தியாகவே உள்ளது. ஆனால் டெல்லி போலத்தான் இங்கும் சூழல் உள்ளது.
சவால்தான் பாஸ்
எனவே எமிரேட்ஸில் ஆடுவது சவாலான விஷயம்தான். ஆனால் இங்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அது ஆறுதலாக உள்ளது.
ஆரம்பிச்சுட்டா பிக்கப் ஆகிடுவோம்ல
ஆனால் நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஒரு போட்டியில் கிளிக் ஆகி ஆட ஆரம்பித்து விட்டால் பிறகு நிற்க மாட்டோம்.
நிலைச்சு ஆடனும்
அனைத்து வீரர்களும் நிலைத்து ஆட வேண்டியது முக்கியம். அப்போதுதான் வெற்றி எளிதாகும்.
அரை இறுதிதான் முதல் டார்கெட்
அரை இறுதிக்குள் நுழைவதுதான் முதல் இலக்காக இருக்கும். அதுவரை அனைவரும் இணைந்து திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியம்.
நாக் அவுட் வந்துச்சுன்னா பின்னனும்
நாக் அவுட் போட்டிகளில் அனைவரும் அவரவர் திறமையை முழுமையாக வெளிக் கொணர வேண்டும். அது முக்கியமானது என்றார டோணி.
டீமே மாறிப் போச்சுப்பா
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 6 வருடங்களாக இருந்தது போல இப்போது இல்லை. நிறையப் பேர் மாறியள்ளனர். பல முக்கிய கைகள் போய் விட்டன.
ஹஸ்ஸி இல்லை
முக்கியமாக மைக் ஹஸ்ஸி இல்லை. அவர் மும்பைக்குப் போய் விட்டார். அதேசமயம் பழையவர்களில் முக்கியமானவர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா, வேயன் பிராவோ ஆகியோர் உள்ளனர்.
மெக்கல்லம்
அதேபோல புதியவர்களில் மெக்கல்லம் முக்கியமான வீரர். அபாயகரமான பாப் டு பிளஸ்ஸிஸும் அணியில் இருக்கிறார்.
பார்க்க நல்லாத்தான் இருக்கு.. ஆடட்டும், பார்க்கலாம்.