சூப்பர் செய்தி
யுவராஜ் சிங் பார்முக்குத் திரும்பியிருப்பது உண்மையிலேயே நல்ல செய்தி. அனைவருக்கும் யுவராஜ் சிங் எப்படிப்பட்டவர் என்பது தெரியும்.
இதுக்கு இவர்தான் சரிப்பட்டு வருவார்
இந்த வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கு மிகவும் பொருத்தமானவர் யுவி. இன்று அவர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது.
கலக்கி விட்டார்
தொடக்கத்தில் அவரால் அடித்து ஆட முடயிவில்லை. காரணம், ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு அப்போது எடுபட்டது. ஆனால் கடைசியில் யுவராஜ் சிங் கலக்கி விட்டார். அவரது அதிரடியைக் காட்டி விட்டார்.
தவனை உட்கார வைத்தது நல்லாதப் போச்சு
ஷிகர் தவனை ஓய்வில் இருக்கச் சொல்லியது ஒரு வகையில் நல்லதாகி விட்டது. இதன் மூலம் யுவராஜ் சிங் தனது பார்மைப் பிடிக்க ஏதுவாகி விட்டது.
ரஹானேவும் சூப்பர்தான்
அவருக்குப் பதில் ரஹானாவே ஓபன் செய்யச் சொன்னோம். ரஹானே நெருக்கடியான நேரங்களில் சிறந்த தொடக்கத்தைக் கொடுப்பார். நல்ல நிலையான வீரரும் கூட. தற்போது கிடைத்துள்ள ஓய்வால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு தவன் தன்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றார் டோணி.
2 போட்டிகளில் சொதப்பிய யுவராஜ்
நேற்று சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங், தனது முதல் இரு போட்டிகளில் சரியாக ஆடவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு ரன்னும், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 10 ரன்கள்தான் எடுத்திருந்தார்.