For Quick Alerts
For Daily Alerts
Just In
காதலனை கொன்று பெண்ணை பலாத்காரம் செய்த ராஜபக்சே கட்சி பிரமுகருக்கு 20 வருட சிறை
கொழும்பு: வெளிநாட்டு சுற்றுலா பயணியை கொலை செய்தது, பாலியல் பலாத்காரம் செய்தது போன்ற குற்றங்களுக்காக இலங்கை ஆளும் கட்சி பிரமுகருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சுதந்திரா கட்சியின் முக்கிய புள்ளி சம்பத் விதானபதிரனா. டவுன் கவுன்சில், தலைவராக பதவியில் உள்ள இவர் மீது பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த குரம் ஷேக்கை கொலை செய்ததாகவும், அவரது காதலியான ரஷ்யாவை சேர்ந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து சம்பத் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த கொழும்பு உயர் நீதிமன்றம் சம்பத் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Comments
English summary
Sri Lanka ruling party politician Sampath Vidanapathirana was found guilty of killing a 32-year-old man who had tried to stop a brawl.