For Daily Alerts
Just In
உள்ளாடைக்குள் ரூ.85 லட்சம் தங்கம்: சென்னை விமான நிலையத்தில் பெண் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில், 65 வயது பெண்மணியிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை போட்டனர். அப்போது அந்த பெண்மணி தனது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடத்தல்கார பெண்மணி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கிரேஸ் செல்வராணி (65) என்பது தெரியவந்தது.
இவர் கொண்டுவந்த தங்கம் 2.5 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு ரூ.85 லட்சம். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
Gold weighing 2.5 kg was recovered today from a 65-year-old female air passenger who arrived here from Kuala Lumpur, Customs officials said. Grace Selvarani, a native of Virudhunagar in the state, brought the gold, worth Rs 85 lakh, by concealing in her undergarment, they said.
Story first published: Monday, July 21, 2014, 16:38 [IST]