புதுக்கோட்டை ரவுடி பட்டு குமார் கொலை வழக்கில் 7 பேர் கும்பல் கைது
புதுகை: புதுக்கோட்டையில் வெட்டிக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி பட்டு குமார் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி பட்டு. இவரது மகன் குமார் என்கிற பட்டு குமார்.
நேற்று முன்தினம் சந்தைக் பேட்டையில் அமைந்துள்ள இரும்புக் கடை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பட்டு குமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களாக் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய எஸ்.பி உமா உத்தரவிட்டதைத் தொடர்ந்து டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஆதனக் கோட்டை வனப்பகுதியில் மறைந்திருந்த சரவணன், ரியாஸ், அருண், அருண்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கொலைக் கும்பலை காவல்துறையினர் வளைத்து பிடித்தனர். அனைவரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.