For Daily Alerts
Just In
மகளுக்கு திருமணம்: பிரதமர் மோடிக்கு பத்திரிக்கை கொடுத்த அன்புமணி
சென்னை: பிரதமர் மோடியை, அன்புமணி சந்தித்து, தன் மகளின் திருமண அழைப்பு கொடுத்தார். பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியின் மகள் சம்யுக்தா மற்றும் பிரித்தீவன் ஆகியோருக்கு வரும் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி உறவினர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை அன்புமணி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து அன்புமணி திருமண அழைப்பிதழை வழங்கினார். திருமண விழாவில் தவறாமல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் படி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அன்புமணியின் மனைவி சவுமியாவும் உடனிருந்தார்.
Comments
English summary
The former Union Minister and PMK MP, Anbumani Ramadoss, met Prime Minister Narendra Modi in New Delhi on Monday and invited him to his daughter Samyukta’s marriage scheduled for October 29 and 30 at Mamallapuram.
Story first published: Tuesday, September 23, 2014, 11:09 [IST]