காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் அடக்கம்
விழுப்புரம்: ஜம்முகாஷ்மீர் மாநிலம் பதன்கோட் என்ற பகுதியில் கடந்த 28ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக வீரர் லான்ஸ் நாயக் அந்தோணி நிர்மல் விஜியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம்செய்யப்பட்டது.
111வது படைப்பிரிவின் பீரங்கிகள் படையில் பணியாற்றிவந்தவர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முகையூர் கிராமத்தை சார்ந்த லான்ஸ் நாயக் அந்தோணி நிர்மல் விஜி.
இவர் பதன்கோட் பகுதியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு இன்று அதிகாலை கொண்டுவரப்பட்டது.
அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்குப்பின் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, தீவீரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியான இவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.