For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 தமிழர் விடுதலை வழக்கு... தலைமை நீதிபதி பேச்சுக்கு அமெரிக்கை நாராயணன் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தொடர்பான விடுதலை வழக்கில் ஏப்ரல் 25ம் தேதி தீர்ப்புஅளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமெரிக்கை நாராயணன் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரை தேவைப்பட்டால் தேர்தல் ஆணையப் பரிசீலனைக்கு அனுப்பி வைப்போம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.

Cong functionary opposes CJI's comment on a judgement

இதுகுறித்து அமெரிக்கை நாராயணன் தரப்பில் கூறுகையில், அரசியல் தொடர்புள்ள வழக்கின் தீர்ப்பு பற்றி தேர்தல் நேரத்தில் பேசியுள்ளார் தலைமை நீதிதி சதாசிவம். தேர்தல் நேரத்தில் அரசியல் தொடர்புடைய வழக்கு பற்றி பேசியது தவறு என்று அவர் கூறியுள்ளாராம்.

யார் இந்த அமெரிக்கை....?

இந்த அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியில் ஒரு செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக அறிக்கை விட்ட இவர் தப்பாக, ராகுல் காந்தி கொலை வழக்கு என்று எழுதி பெரும் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Cong functionary Americai Narayanan has opposed SC CJI Sathasivam's comment on a judgement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X