For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தொடர்ந்த 3வது அவதூறு வழக்கு: அக்.30ல் ஆஜராக சு.சுவாமிக்கு கோர்ட் சம்மன்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த 3வது அவதூறு வழக்கிலும் அக்டோபர் 30-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழக மீனவர் பிரச்சனையில் தலையிட்டு தமிழ்நாட்டின் கோபத்துக்குள்ளானார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்ததால் அவர் மீது அடுத்தடுத்து 2 அவதூறு வழக்குகள் போடப்பட்டன.

Court issues summons to Subramanian Swamy

இந்த வழக்குகளில் அக்டோபர் 30-ந் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் "தீவிரவாதிகளின் நண்பனாக" ஜெ. அரசு செயல்படுகிறது ட்விட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவைப் போட நேற்று 3வது அவதூறு வழக்கை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்தார்

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் இந்த வழக்கிலும் அக்டோபர் 30-ந் தேதி சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

English summary
Chennai court today ordered issue of summons to BJP leader Subramanian Swamy to appear before it on October 30 in connection with a defamation suit filed against him by Tamil Nadu Chief Minister J Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X