கடலூரில் மீண்டும் உருகிய வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை “சீல்”
கடலூர்: கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
அவை, கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் 3 அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
விருத்தாசலம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை வெயிலின் காரணமாக சிறிதளவு உருகியது.
கலெக்டர் பார்வை:
உருகிய சீலை கலெக்டர் கிர்லோஷ்குமார் சென்று பார்வையிட்டார். சிறிய அளவு உருகி இருந்ததால் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
மீண்டும் உருகிய சீல்:
இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிக அளவு அந்த "சீல்" உருகியது. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் கிர்லோஷ்குமார் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களுடன் சென்று அதை பார்வையிட்டார்.
பூட்டின் மறுபக்கம்:
உருகிய சீலுக்கு பதிலாக புதிய "சீல்" வைக்கலாமா என்று ஆலோசனை செய்தனர். அப்போது இளகிய சீலுக்கு பதிலாக பூட்டின் வேறு பக்கத்தில் மறுசீல் வைக்கலாம் என்று முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
மாற்று சீல்:
அதன்படி உருகிய சீலுக்கு அருகில் பூட்டின் வேறு பக்கத்தில் மறு "சீல்" வைத்தனர்.