For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“வாக்களிக்க ‘பூத் சிலிப்’ மட்டும் போதும்” – பிரவீன் குமார் அறிவிப்பு

|

திருச்சி: "பூத் சிலிப்" மட்டும் இருந்தால் போதும்...மற்ற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Election commission allows “Booth slip” only for vote…

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளிலும் வாக்குப் பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் திருச்சி, சுப்ரமணிய புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப் படவில்லை.

இதனால் வாக்களிக்க இயலாத வாக்காளர்கள் மூலம் பிரவீன் குமாரிடம் இப்புகார் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வாக்கினைப் பதிவு செய்ய 'பூத் சிலிப்' மட்டுமே போதுமானது.மற்ற 12 ஆவணங்களும், வாக்காளர் அடையாள அட்டையும் இல்லாவிட்டாலும் கூட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் வாக்கினை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து "பூத் சிலிப்" மட்டும் உள்ள வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

English summary
Election commission says that people can allow to vote with Booth slip. No other documents needed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X