For Daily Alerts
Just In
ஓ.பன்னீர் செல்வம் உதவியாளர் காரிலிருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல்
காரைக்கால்: தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் உதவியாளர் ராஜா என்பவரின் காரிலிருந்து ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பன்னீர் செல்வம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்கிறார் என்று வந்த புகாரின் பேரில் அவரது பண்ணை வீடு சோதனையிடப்பட்ட நிலையில் தற்போது அவரது உதவியாளர் ராஜாவிடமிருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அருகே அம்பகரத்தூர் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பன்னீர்செல்வத்தின் உதவியாளர் ராஜாவின் காரில் ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்களைக் காட்டினால் பணம் திருப்பித் தரப்படும் என்று பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
Election flying squad officials have seized Rs 1 lakh cash from finance minister O Pannerselvam's assistant Raja near Karaikal.
Story first published: Sunday, April 20, 2014, 16:45 [IST]