ஈவிகேஎஸ் சொல்வதைக் கேளுங்க.. இதுக்கு மேல இறங்கி வந்து யாருமே ஓட்டு கேட்க முடியாதுங்க..!
திருப்பூர்: திருப்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், அங்கு நடந்த பிரசாரத்தில் பேசியது படு உருக்கமாக இருந்தது.
தனது குடும்பத்தின் சொத்து பத்துக்கள் குறித்தும், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை விவரித்தும் இறங்கி வந்து ஓட்டு கேட்டார் இளங்கோவன்.
அம்மாபேட்டை வட்டாரத்திற்கு உள்பட்ட குட்டை முனியப்பன் கோவில், குறிச்சி உள்பட 49 கிராமங்களில் இளங்கோவன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது...
40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்
என் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை. இனிமேலும் இறுதி மூச்சு உள்ளவரை லஞ்சம் வாங்க மாட்டேன்.
பண ஆசையெல்லாம் போச்சுங்க
எனக்கு சொத்து, பணம் மீது ஆசையும் கிடையாது.
மனைவி, குழந்தைகளுக்குத் தேவையானதை
என் மனைவி, குழந்தைகளுக்கு தேவையான சொத்துக்களை முன்னோர்களே சம்பாதித்து கொடுத்து விட்டனர்.
பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி கட்டினேன்
2004-ல் அமைச்சராக இருந்தபோது பள்ளி கட்டிடங்கள், மருத்துவ மனை கட்டிடங்கள் கட்டியுள்ளேன். கல்வி கடனுக்கு தேவையான உதவிகள் செய்துள்ளேன்.
மீண்டும் ஒரு சான்ஸ் தாருங்கள்
மீண்டும் ஒருமுறை உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள். மீண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சிஅமைய வழிகாட்டுங்கள் என்றார் இளங்கோவன்.