அம்மாவை எப்படி கைது செய்யலாம்? - அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று உண்ணாவிரதம்
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் முத்துரங்கன் தலைமையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கியது.
அரசு மற்றும் தனியார் துறை மருத்துவர்கள், இயன் முறை மருத்துவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
டாக்டர் சீனிவாசராஜா, டாக்டர் பன்னீர் செல்வம், டாக்டர் வடிவேல் பெருமாள், டாக்டர் விஜயராவ் உள்ளிட்ட மாவட்ட அதிமுக மருத்துவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
மக்களின் முதல்வர், தமிழகத்தின் அம்மாவாகத் திகழும் ஜெயலலிதாவைக் கைது செய்தது தவறு என்றும், அவரை உடனே விடுவிக்கக் கோரியும் இந்த உண்ணாவிரதத்தில் கேட்டுக் கொண்டனர்.