For Daily Alerts
Just In
விவாகரத்து கேட்ட மனைவி – பிரிய முடியாமல் தூக்கில் தொங்கிய கணவர்
சென்னை: விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு தொடர்ந்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சென்னை ஜெ.ஜெ நகர் 10 ஆவது பிளாக்கைச் சேர்ந்தவர் கலைமுத்து கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துக்குமாரி. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது.
கலைமுத்து கஷ்டப்பட்டு மனைவியை எஞ்ஜினியரிங் படிக்க வைத்தார். இந்த நிலையில் குடும்ப தகராறில் முத்துக்குமாரி கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
மேலும் கணவரிடம் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கலைமுத்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஜெ.ஜெ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Comments
English summary
Husband got suicide in JJ nagar because his wife asked divorce from him. Police filed case and investigate about this suicide.
Story first published: Tuesday, June 10, 2014, 17:58 [IST]