குடிக்க பணம் தராததால் மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்!
சேலம்: சேலத்தில் மனைவி குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று கல்லாலேயே அடித்துக்கொலை செய்த குடிகார கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி சந்திரா . கடந்த மாதம் 25 ஆம் தேதி மேட்டூர் நான்கு சாலை எம்.ஜி.ஆர் பாலம் அருகே காவிரிக்கரையில் சந்திரா கொலை செய்யப்பட்டு பிணமாகக்கிடந்தார். அவர் யாரோ ஒருவரால் பலமாகத் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கட்ட வேலைக்கு சென்று வந்த சந்திரா வாங்கிவரும் சம்பளம் முழுவதையும் சுப்பிரமணியம் வாங்கி குடித்துவந்துள்ளார் என்றும், சந்திரா பணம் கொடுக்க மறுக்கும் போதெல்லாம் இருவருக்கும் சண்டை ஏற்ப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் சுப்பிரமணியிடம் மேற்கொண்ட விசாரனையில், கட்டிட வேளைக்கு சென்ற சந்திரா வீட்டில் சம்பளம் வாங்கி வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சுப்பிரமணி, சரக்கடிக்க பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
சந்திரா பணம் தர மறுத்ததை தொடர்ந்து, அவரைக் கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் சுப்பிரமணி கொலை செய்ததுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சுப்பிரமணியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.