For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேசாமல் 2 விரலை மட்டும் காட்டி அதிமுகவுக்கு வாக்கு கேட்ட இந்தியாவின் உயரமான மனிதர்

By Siva
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: இந்தியாவின் உயரமான மனிதரான சந்தோஷ் குமார் அதிமுகவுக்காக கொடைக்கானலில் வாக்கு சேகரித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் உதயகுமார் போட்டியிடுகிறார். அவருக்காக வித்தியாசமாக பிரச்சாரம் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டனர்.

India's tallest man campaigns for ADMK in Kodaikanal

இதையடுத்து அவர்கள் இந்தியாவின் உயரமான மனிதரான சந்தோஷ் குமாரை(41) பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தனர். சந்தோஷ் நேற்று கொடைக்கானல் நகரில் உதயகுமாருக்கு வாக்கு சேகரித்தார். 7 அடி 6 அங்குலம் உள்ள அவர் ஜீப்பில் நின்று கொண்டு இரண்டு விரல்களை மட்டும் காட்டியபடியே சென்றார்.

அவரை பார்க்கவே பெரும் கூட்டம் கூடிவிட்டது. இவ்வளவு உயரமான மனிதரா என்று வியந்த மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள போட்டி போட்டனர்.

சந்தோஷ் குமார் கர்நாடக மாநிலம் ரைச்சூர் மாவட்டம் லிங்சுகுர் தாலுகாவில் உள்ள முத்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image courtesy: www.thetallestman.com

English summary
Santhosh Kumar, India's tallest man campaigned for Dindigul lok sabha constituency ADMK candidate Udayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X