திருச்சி அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் குமார்
திருச்சி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் திருச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளராக ப.குமார் அறிவிக்கப் பட்டுள்ளார்.
பிஎஸ்ஸி., பிஎல். படித்திருக்கும் குமார் (43), முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெயர் கே. பழனிவேல்- முனியம்மாள். மனைவி பெயர் கே. காயத்ரி. இவர்களுக்கு கே.முகேஸ்(10) என்ற மகனும், கே. சிவானி(8) என்ற மகளும் உள்ளனர்.
வழக்குரைஞராக பணி புரிந்து வரும் குமார் முன்னாள் மாவட்ட வழக்குரைஞரணி இணைச் செயலர் ஆவார். மேலும் கழக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலராகவும், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினராகவும் கட்சிப் பொறுப்பில் உள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kumar has been announced the ADMK candidate for Trichy loksabha seat by party chief Jayalalitha.