ரோட்டை அடைக்காத பிரசாரம்... லீலாவதிக்கு நினைவஞ்சலி.. மதுரையில்!
மதுரை: ரோட்டை அடைத்து பிரசாரம் செய்வதுதான் அரசியல் கட்சிகளின் பாரம்பரியம். ஊரையே அடைத்து குழாய் ஒலிபெருக்கியை கதற விட்டு.. மக்களின் காதுகளை காலி செய்யும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் கம்யூனிஸ்டுகள் எப்போதுமே வித்தியாசம்தான்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் விக்கிரமனின் கடைசி கட்ட பிரசாரக் கூட்டம் வித்தியாசமாக இருந்தது.
ரோட்டோரமாக சேர் போட்டு உட்கார்ந்து யாருக்கும் இடையூறு இல்லாமல் நடந்த அந்தப் பிரசாரம், மதுரை வில்லாபுரத்தில் திமுகவினரால் படுகொலை செய்யப்பட்ட லீலாவதியை நினைவு கூறும் தினமாகவும் அனுசரிக்கப்பட்டது.
லீலாவதி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று. அதை நேற்றைய கடைசி கட்ட கூடட்த்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நினைவு கூர்ந்து அனுசரித்தனர்.
லீலாவதி நினைவாக
நேற்றைய கூட்டத்தை லீலாவதி நினைவை அனுசரிக்கும் கூட்டமாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைப்பிடித்தனர்.
சாலையோரம் கூட்டம்
சாலையோரமாக நடந்த இந்தக் கூட்டத்தில் சாலை போக்குவரத்தைப் பாதிக்காத வகையில்இருக்ககைள் போடப்பட்டு தலைவர்கள் பேசினர்.
வில்லாபுரம் லீலாவதி
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் லீலாவதி. இவர் கவுன்சிலராக இருந்தவர். அப்போது குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக திமுகவனருக்கும் இவருக்கும மோதல் ஏற்படவே கொடூரமாக நடுரோட்டில் வைத்துப் பட்டப் பகலில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்ட்டவர் லீலாவதி.
இன்று நினைவு நாள்
இன்று லீலாவதியின் நினைவு நாளாகும். 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி லீலாவதி படுகொலை செய்யப்பட்டார்.