For Daily Alerts
Just In
லோக்சபா தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 40 தொகுதிகளில் மதுரை ஆதீனம் பிரச்சாரம்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக 40 தொகுதிகளில் மதுரை ஆதினம் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்த அவர் தமது ஆதரவினை தெரிவித்து இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை மதுரை ஆதீனம் நேரில் சந்தித்தார். அப்போது 24-4-2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு தெரிவித்து கொண்டதோடு, அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தாம் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.அதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Madurai Adheenam Arunagirinatha Swamigal on Friday called on Chief Minister and AIADMK general secretary J Jayalalithaa at her residence here and expressed support for the AIADMK in the ensuing Lok Sabha elections.
Story first published: Saturday, March 8, 2014, 9:34 [IST]