மகள் வயது குழந்தையிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட "தமிழன்"!
நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை கட்டிட தொழிலாளி ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள பழவூர் சிதம்பராபுரம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
அவளது பக்கத்து வீட்டில் தமிழன் என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான அவருக்கு திருமணமாகி 12 வருடம் ஆகிறது.
குழந்தை இல்லாதவர்:
குழந்தை இல்லை. இதனால் தமிழன் ஒரு பெண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
சிறுமியிடம் சில்மிஷம்:
மாலை நேரங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி, தமிழன் வீட்டுக்கு சென்று அந்த குழந்தையிடம் விளையாடுவாள். அப்போது சிறுமியிடம் தமிழன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சிறுமியும் இதை வெளியே சொல்லவில்லை.
பாலியல் பலாத்காரம்:
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட தமிழன் தனது மனைவி வெளியே சென்றிருந்த போது சிறுமியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி வலிதாங்க முடியாமல் அலறினார்.
சுற்றி வளைத்த மக்கள்:
அவளது அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தமிழன் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்டினர். நீண்ட நேரம் கழித்து தமிழன் கதவை திறந்துள்ளார். சிறுமி அனிதா அழுதபடி வெளியே வந்து நடந்த விபரத்தை கூறினார்.
தமிழனுக்கு தர்மஅடி:
இதை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழனுக்கு தர்மஅடி கொடுத்து பழவூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து தமிழனை கைது செய்தனர்.
மருத்துவமனையில் அனுமதி:
பாதிக்கப்பட்ட சிறுமி அனிதாவை, போலீசார் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தொடரும் வன்முறைகள்:
நாங்குநேரி அருகே 5 ஆம்வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து தலைமையாசிரியர் சில்மிஷம் செய்த சம்பவத்தின் வடு ஆறுவதற்கு முன் பழவூர் அருகே நடந்த இந்த சம்பவத்தால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.