For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13 வயது மாணவி பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோபி ஓடத்துறையில் வசிக்கும் ஜெய பிரகாஷ் என்பவரது மகன் ரகு பிரசாத் (வயது 20). கோபி நகரில் கார் மெக்கானிக் ஷாப் நடத்திவருகிறார். இவர் நடத்திவரும் ஒர்க்ஷாப் அருகே 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது ஒரு சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டில் அந்த சிறுமி வசித்து வந்தாள்.

இந்த நிலையில் சம்பவத்த்ன்று (கடந்த 14.02.2013 அன்று) மாணவி, பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த ரகு மாணவியை ஏமாற்றி தனது வீட்டுக்கு கூட்டிச் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோபி மகளிர் போலீசில் அந்த மாணவி தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீஸார் ரகு பிரசாத்தை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இத்ந வழக்கை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி சர்வமங்களா, வழங்கிய தீர்ப்பில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ரகுபிரசாத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரமும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Jayaprakash, a 20-year-old resident of Gopisettipalayam, was sentenced on Wednesday to 10 years in prison for raping an 13-year-old girl.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X