அதிமுகவில் இணைந்தார் மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சீமாபஷீர்!
சென்னை: மறுமலர்ச்சி திமுக மாநில அமைப்புச் செயலாளர் சீமாபஷீர் அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
இது குறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா முன்னிலையில், புதன்கிழமை இன்று மதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், சென்னை மாநகராட்சி 60-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான சீமாபஷீர்,
வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சு.ஆ. இயேசுராஜ், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஹ. மகரூப், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முஸ்தபா,
துறைமுகம் பகுதி மாவட்டப் பிரதிநிதி ஜாஹீர் ரபி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உடன் இருந்தார்.
இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.