யார் பிரதமர்? மோடி- 51%; ஜெ. 26% ; ராகுல்- 21 % ஆதரவு: ஜூ.வி. சர்வே
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் யார் பிரதமராக ஆதரவு என்று ஜூனியர் விகடன் வாரம் இருமுறை கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக தமிழகத்தில் 51% ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் சர்வே கூறுகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள், யார் பிரதமராக ஆதரவு என்பது தொடர்பாக மொத்தம் 25,247 பேரிடம் ஜூனியர் விகடன் கருத்து கணிப்பை மேற்கொண்டது. இக்கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யார் பிரதமர் என்ற கேள்விக்கு மோடிக்கே அதிக ஆதரவு என்கிறது ஜூனியர் விகடன் சர்வே.
மோடிக்கு 51%
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு மொத்தம் 50.68% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனராம். அதாவது 12,796 பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
ஜெ.க்கு 25.71%
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று 25.71% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தம் 6,492 பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுலுக்கும் நல்ல ஆதரவு
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்கு தமிழகத்தில் கணிசமான ஆதரவு இருக்கிறது என்கிறது ஜூ.வி. சர்வே.
ராகுலுக்கு 21.37%
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று 21.37% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 5,396 பேர் ராகுலை ஆதரிக்கிறார்களாம்.
கருத்து சொல்ல விரும்பாதோர்
யார் பிரதமராக வேண்டும் என்பதற்கு 2.24% கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். மொத்தம் 563 பேர் கருத்து சொல்ல விரும்பவில்லையாம்.