6 மாதத்தில் கசந்துபோன “காதல் திருமணம்” – புது மணப்பெண் தற்கொலை!
திருச்சி: திருச்சியில் காதல் திருமணம் புரிந்து கொண்ட பெண் ஒருவர் 6 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ்நகர் வயர்லெஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் டிரைவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடித்துவிட்டு தகராறு:
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே சதீஷ் குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
விஷம் குடித்த மனைவி:
இதில் மனம் உடைந்த பிரியா சம்பவத்தன்று விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.
பிரியா பரிதாப பலி:
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியா நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
மகளிர் போலீசார் விசாரணை:
இது குறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் சதீஷிடம், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகின்றது.
குடும்பத்தினர் சோகம்:
கணவரின் குடிப் பழக்கத்தால் காதல் திருமணம் செய்த இளம்பெண் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.