For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதாவுக்கு புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி உண்ணாவிரதம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரியும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் கண்டித்தும் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் அவரது கட்சியினர் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்.
புரட்சி பாரதம் சார்பில் நடந்த இந்தப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்தது.
இப்போராட்டம் குறித்து பூவை ஜெகன்மூர்த்தி கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை உடனே விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும்.
பெங்களூர் சிறைக்கு முன்பு கூடிய அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய கர்நாடக போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புரட்சித் தலைவி விரைவில் விடுதலை ஆவார் என்று தெரிவித்தார்.
Comments
English summary
Puratchi Bharatham party cadrs under the leadership of Poovai Jagan Murthy hold a fast protest in support of Jayalalitha in Chennai today.
Story first published: Tuesday, September 30, 2014, 15:11 [IST]