1945ல் நேதாஜி, தற்போது 51 பேர் பலி: தைவானில் தொடரும் விமான விபத்துகள்
சென்னை: தைவானில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை நடந்த விமான விபத்துகள் குறித்த அலசல் இது.... 1945ம் ஆண்டில் தைவானில் நடந்த விமான விபத்தில் தான் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தைவானில் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் 51 பேர் பலியாகினர்.
தைவானில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அங்கு இதுவரை நடந்த விமான விபத்துகள் குறித்த அலசல் இது...
ஜப்பான் விமானம்
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ஜப்பான் விமானம் தைவானின் பெர்மோசாவில் விபத்துக்குள்ளானதில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பலியானார்.
சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட்
1964ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி சிவில் ஏர் டிரான்ஸ்போர்ட் விமானம் தைவானின் ஜியாவ்க்ஸியில் விபத்துக்குள்ளானதில் 57 பேர் பலியாகினர்.
சீனா ஏர்லைன்ஸ்
சீனா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 1989ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி தைவானில் உள்ள சியாஷன் மலைகளில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 54 பேர் பலியாகினர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 006 தைவானின் தாயுவானில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 83 பேர் பலியாகினர்.
டிரான்ஸ் ஏசியா
2014ம் ஆண்டு ஜுலை 23ம் தேதி டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் தைவானில் விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாகினர்.