For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவுக்கு தண்டனை: நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்த பாமக நிர்வாகி கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

மதுரை: ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து கொண்டாடிய பாமக கட்சி நிர்வாகியை, சட்டம்-ஒழுங்கை சீர்கெடுத்த குற்றத்தின்பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த தண்டனையை வரவேற்று மதுரை அருகேயுள்ள சமயநல்லூரை சேர்ந்த பாமக மாவட்ட துணை செயலாளர் பிரபு (32) கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Pmk party cadre arrested for bursting crackers

சமயநல்லூர் பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.இதை அறிந்து ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டம் ஒழுங்குக்கு இடையூறு செய்ததாக பிரபு மீது வழக்குப்பதிவு செய்தும் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

ஏற்கனவே கலவரத்தை தூண்டியதாக திமுக தலைவர் கருணாநிதி மீதும், பொருளாளர் ஸ்டாலின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pmk party cadre arrested for bursting crackers to show his happiness for Jayalalitha's jail term.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X