தமிழ் எழுத்தாளர்கள் இரா.நடராஜன், ஆர்.அபிலாஷுக்கு பால சாகித்ய அகாடமி விருதுகள்!
இது தொடர்பாக சாகித்ய அகாடமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளுக்கான சிறந்த படைப்புகளை உருவாக்கியவர்களுக்காக வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி எனப்படும் பால புரஸ்கார் விருதுக்கு, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் தமிழில், 'விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள் என்ற படைப்பை எழுதிய இரா. நடராஜனுக்கு பால சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
இதேபோல், சாகித்ய அகாடமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழ் கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் ஆர்.அபிலாஷும் இடம்பெற்றுள்ளார்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என சாகித்ய அகாடமி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொற்கை நாவலுக்காக ஜோ.டி.குரூஸ் சாகித்ய அகாடமி விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.