தமிழகத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்: நுங்கம்பாக்கம், அசோக்நகருக்கு புதிய உதவி கமிஷனர்கள்
சென்னை: தமிழகத்தில் ஏழு டி.எஸ்.பி.க்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி நுங்கம்பாக்கம், அசோக்நகருக்கு புதிய உதவி கமிஷனர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :-
உளவு பிரிவு (ஹைகோர்ட்) உதவி கமிஷனராக இருந்த பாண்டியன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். வடசென்னை மதுவிலக்கு உதவி கமிஷனர் ஆறுமுகம், அசோக் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சென்னை உளவு பிரிவுக்கும், திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சிவலிங்கம், கும்மிடிப்பூண்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விருதுநகர் டி.எஸ்.பி. சுப்பிரமணியன் நீலகிரிக்கும், திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கவுதமன் தர்மபுரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை தலைமையக உதவி கமிஷனர் கோபால் பரங்கிமலை போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி மதுவிலக்கு டி.எஸ்.பி. திருநீலகண்டன், கூடலூருக்கு இடம் மாற்றம் செய்ய முதலில் உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு தர்மபுரியிலேயே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.