For Daily Alerts
Just In
குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாய்- அடித்தே கொலை செய்த மகன்!
புதுச்சேரி: புதுச்சேரியில் மது குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை, கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாகதேடி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான சின்னக்கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குணசீலன். 30 வயதான இவர் மதுவுக்கு அடியானவர்.
கடந்த சனிக்கிழமை தனது தாயார் தனலட்சுமியிடம் 50 ரூபாய் குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது அவருக்கு தனலட்சுமி அறிவுரை கூறியுள்ளார்.
பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த குணசீலன், அருகில் கிடந்த இரும்பு கம்பியால், தாயை சரமாரியாக தாக்கினார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவான குணசீலனை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments
English summary
Man hit his mother and killed her for refused to give money to drink alcohol. Police filed case and searching for that man.
Story first published: Monday, September 1, 2014, 17:10 [IST]