நற்பண்புகளை வளர்க்க “மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்” – பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் அமைந்துள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கவலைகளைப் போக்குவதற்காக "மகிழ்ச்சி கொடுக்கும் வாரம்" கொண்டாடப்பட உள்ளது.
பள்ளி மாணவர்களிடையே, நற்பண்புகளை வளர்ப்பதற்காக அனைத்து பள்ளிகளிலும் மகிழ்ச்சி கொடுக்கும் வாரம் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த மகிழ்ச்சி கொடுக்கும் வாரத்தில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், குழு போட்டிகள், மகிழ்ச்சிக்கான சிந்தனை பேச்சுகள் ஆகியவை வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொடுத்து உதவுவதே மகிழ்ச்சி என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான போட்டிகளும் நடைபெறும் என்று தெரிகின்றது.
இந்த விழாவிற்கான அடிக்கோலாக பள்ளிக்கல்வி இயக்குனர், தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.